கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 6, 2009

கடையநல்லூர் டிசம்பர் - 6 ஆர்ப்பட்டம்

கடையநல்லூரில் பாபர்மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


டிசம்பர் 6 மாலை 4 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா முன்பு 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சைபுல்லா ஹாஜா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது 

மாவட்ட துணைத்தலைவர் ஜபருல்லா மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் மாவட்ட நலத்திட்ட அணிச் செயலாளர் குறிச்சி சுலைமான் சவுதி அரேபியா இஸ்லாமிய அழைப்பாளர் பஷீர் அகமது உமரி மற்றும் நகர தலைவர் முகம்மது கோரி, செயலாளர் முகம்மது காசிம் பொருளாளர் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்' மேற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு தென்காசி செங்கோட்டை வல்லம், ஆலங்குளம், அச்சன்புதூர், வீராணம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், சொக்கம்பட்டி மற்றும் கடையநல்லூரில் உள்ள மக்கா நகர், மதினா நகர், இக்பால் நகர், பேட்டை, ரகுமானியாபுரம் ஆகிய ஊர்களிலிருந்தும் மாலை தொழுகையை முடித்துவிட்டு சரியாக 4 மணியளவில் முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக ஆர்பாட்ட களத்தை நோக்கி அணிவகுத்து வந்தனா. நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் கிளை நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம ஒப்படை. பள்ளிவாசலை இடித்த அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிங்கால் உள்ளிட்டவர்களை கைது செய். பாபர் மஸ்ஜித் வழக்குகளை விரைந்து முடிக்க தனிவிரைவு நீதி மன்றம் அமைத்திடு என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். நகர துணைச் செயலாளர் யூசுப் பைஜி நன்றியுரை நிகழ்த்தினார்.


ஆர்ப்பாட்ட்த்தில் எழுப்பப்பட்ட கண்டன கோஷங்கள்
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
இடிக்கப்பட்டதை மறக்கடித்து
கசியப்பட்டதை பெரிதாக்கும்
கயவர்களை கண்டிக்கிறோம்!
டிசம்பர் ஆறில் மசூதி இடிப்பு
டிசம்பர் பத்தில் பரான் அமைப்பு
எத்தர்களின் ஈனச் செயலால் எரிகிறது உள்ளக் கொதிப்பு!
கண்துடைப்பு கமிஷன்களால்
கண்ட பயன் ஏதுமில்லை
காலங்கள் கடந்தாலும்
கண்டு கொள்ள யாரும் இல்லை!
பதினேழு ஆண்டுகள் பறந்தோடியும்
பயனற்ற செயல்கள்தான் தொடர்கின்றன
பாவப்பட்ட சமுதாயம் மீது
ஏவப்பட்ட இன்னல்களுக்கு
என்றுமே முடிவுகள் இல்லை
எத்தனை காலம் இந்தத் தொல்லை
கமிஷன் அறிக்கையும் வெத்து வேட்டே
காங்கிரசின் வாக்குறுதியும் வெத்து வேட்டே!
படிக்கப்பட்ட பரான் அறிக்கையில்
இடிக்கப்பட்ட கயவர்ளைத் தண்டிக்க
கொடுக்கப்பட்ட அம்சங்கள் என்னென்னவென்று
கூற முடியுமா காங்கிரஸ் அரசால்
கமிஷனும் வேண்டாம்
ஒரு கருமாந்திரமும் வேண்டாம்
கட்டித்தந்து களங்கம் நீக்க
காங்கிரஸ் முன் வந்தால் போதும்
தீதினைப் புரிந்தவர்கள் யாரெனத் தெரிந்தும்
தீயவர்களைத் தண்டிக்க தீவிரம் ஒன்றும் காணோமே!
காலம் போனது போகட்டும்
கடும் நடவடிக்கையாவது பாயட்டும்..






பத்திரிக்கை ஆறிக்கை

பாபர் மஸ்ஜித் நிலத்தை ஓப்படைக்கக் கோரி கடையநல்லூரில் முஸ்லி ம்கள் இர்பாட்டம். பெண்கள் ஊட்பட இயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் (பசபஓ) நடத்தியது
450 ஆண்டுகால பாரம்பரியமிக்க வரலாற்றுச் சின்னமாகவும் முஸ்­ம்களின் வழிபாட்டு தலமாகவும் விழங்கிய பாபரி மஸ்ஜித் டிசம்பர் 6 1992ல் மதவெறியர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை இப்பிரச்சினைக்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவும் இல்லை.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்மராவ் உடனே மீண்டும் பள்ளிவாசல் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்திய அரசிய ல் இருந்து அவர் காணாமல் போனதைப் போலவே அவரது வாக்குறுதியும் காணாமல் போனது.
பாபர் மஸ்ஜித் விவகாரம் தொடர்பான நீண்டி நெடிய வரலாற்றை திரும்பிப் பார்த்தால் முஸ் ம்களுக்கு காங்கிரஸ் மிகப் பெரும் துரோகத்தைத்தான் செய்திருக்கிறது. இந்த உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
1949ம் ஆண்டு டிசம்பர் 23 நள்ளிரவில் சமூக விரோதக் கும்பல பாபர் மஸ்ஜிதுக்குள் நுழைந்து ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளை வைத்து பிரச்சினையை துவக்கி வைத்தது.
அப்போது உ.பி மாநில் காங்கிரஸ் அரசின் முதல்வராக கோவிந்தவல்லப பந்த் இருந்தார்.
அத்துமீற ல் ஈடுபட்ட சமூக விரோதக் கும்பல் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து சிலைகளை அப்புற்படுத்தி இருந்தால் இன்று முஸ் ம்கள் வீதியில் நின்று போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் ப யாகி இருக்காது. நாட்டில் இரத்த ஆறு ஓடி இருக்காது அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும் இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து இந்திராகாந்தி ஆட்சியின் போது பாபர் மஸ்ஜித் பூட்டப்பட்டது.
பின்னர் ராஜீவ்காந்தி, பூட்டிய பள்ளிவாச ன் பூட்டை திறந்து பூஜிக்க வழிவகுத்து கொடுத்தார்.

பின்னர் நரசிம்மராவ் ஆட்சியின் போது பள்ளிவாசல் திட்டமிட்டு தகர்க்கப்பட்டது.
ஆக பாபர் மஸ்ஜிதின் ஒவ்வொரு அசைவிலும் காங்கிரஸ் அரசு முஸ் ம்களுக்கு இழைத்த அநீதி வெளிப்படுகிறது. ஆனாலும் காலமாற்றத்தில் காங்கிரஸ் கடந்த ஆறாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்த போது பாபர் மஸ்ஜித் இடிப்பில் தொடர்புடைய பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கடும் எதிôப்புகளை தெரிவித்து நியாயத்தின் பக்கம் நின்றது.

இப்போது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளது. இந்நிலையில் பாபர் மஸ்ஜித் விஷயத்தில் கடந்த காலங்களில் நடந்த தவறுகளுக்கு பரிகாரம் காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
• பாபர் ம'ஸ்ஜித் நிலத்தை உடனடியாக  முஸ் ம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
• பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளான அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிங்கால் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• 59 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் பாபர் மஸ்ஜித் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உடனடியாக தனிவிரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
இதைச் செய்தால் தான் உண்மையாகவே பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றே அனைவரையும் கட்டுப்படுத்த முடியும்.
பேச்சுவார்த்தை மூலம் ஒரு காலத்திலும் தீர்வு ஏற்படாது என்பதை அனைவரும் உணர்ந்து நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்.
இதை வ யுறுத்தித்தான் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (பசபஓ) தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது.
அதன் தொடரில்தான் கடையநல்லுரிலும் இன்று 6.12.2009 இந்த அறவழிப் போராட்டம் நடக்கிறது.
இன்று மாலை 3 மணிக்கு கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ ஸைபுல்லாஹ் ஹாஜா தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜபருல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் , மாவட்ட நலத்திட்ட செயலாளர் குறிச்சி சுலைமான் மற்றும் நகரத் தலைவர் முஹம்மது கோரி, செயலாளர் முஹம்மது காசிம் பொருளாளர் பாவா மற்றும் பசபஓ நிர்வாகிகள்தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ் ம்களிடம் ஒப்படை. பள்ளிவாசலை இடித்த அத்வானி. உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிஙகால் உள்ளிட்டவர்களை கைது செய். பாபர் மஸ்ஜித் வழக்குகளை விரைந்து முடிக்க தனிவிரைவு நீதிமன்றம் அமைத்திடு என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
நகரத் தலைவர் முஹம்மது கோரி நன்றியுரை நிகழ்த்தினார்