இறையருளால் கடந்த 03/06/2011 அன்று அமீரகவாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்கள் கலந்து கொண்ட மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் துபை TNTJ மர்கஸில் வைத்து அமீரக பொறுப்பாளர்.சகோ.இபுறாகிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஏகத்துவ கொள்கையின் அவசியமும்,நன்மைகளும் என்ற தலைப்பில் அவர் தலைமை உரையாற்றினார். துபை மண்டல TNTJ பொருளாளர் பரங்கிப்பேட்டை சகோ.இஸ்மாயில் அவர்கள் முன்னிலை வகித்தார்.அதனை தொடர்ந்து சகோ.மசூது கடையநல்லூரில் நடைபெற்று வரும் பணிகளைப் பற்றியும்,அப்பணிகள் தொடர்ந்து நடைபெற பொருளாதார ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதின் அவசியத்தினையும் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் எடுத்துரைத்தார்.கடந்த காலப்பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கடையநல்லூர் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment