கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 30, 2012

TNTJ பேட்டை கிளையின் சார்பாக பெண்கள் பயான்

 29.09.2012 அன்று கடையநல்லூர் பேட்டை சந்தை தெற்குத் தெருவில்TNTJ பேட்டை கிளையின் சார்பாக பெண்கள் பயான் சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் சகோதரி சபினா ஆலிமா அவர்கள் "ஷிர்க்" என்ற தலைப்பில் சுமார் 40 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகவும் பயன் உள்ள கேள்விகள் பல கேட்கப்பட்டு அதற்க்கு சகோதரி சபினா ஆலிமா அவர்களால் மிகச்சிறந்த முறையில் பதில் அளிக்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.


    இதில் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீட்டில் கூட்ட நெருக்கடியால் பெண்கள் வீட்டுக்கு வெளியே நின்று நிகழ்ச்சியே கேட்கும் நிலை ஏற்பட்டது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இதை விட பெரிய இடத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்வது என்று பேட்டை கிளை  நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.



No comments: