கடையல்லூர் காயிதே மில்லத் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மூன்று இடங்களில் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யபட்டு
இருந்தது. கடையல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் குளித்துவிட்டு நறுமணம் பூசி அதிகாலை 6மணிமுதலை கடையநல்லூர் காயிதேமில்லத் திடலே நோக்கி வரத் தொடங்கினர்.
சரியாக 6.45 மணியளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு பெருநாள் உரையாற்றினார்.
இதில் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் மற்றும் பேட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
தென்காசி கோட்டாட்சியர் ரெகோபெயாம் உத்தரவின் பெயரில், தென்காசி வட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில், புளியங்குடி சரக துணை கண்காணிப்பாளர் வானுமாமலை மேற்பார்வையில், கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மூன்று இடங்களில் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யபட்டு
இருந்தது. கடையல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் குளித்துவிட்டு நறுமணம் பூசி அதிகாலை 6மணிமுதலை கடையநல்லூர் காயிதேமில்லத் திடலே நோக்கி வரத் தொடங்கினர்.
சரியாக 6.45 மணியளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு பெருநாள் உரையாற்றினார்.
இதில் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் மற்றும் பேட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
தென்காசி கோட்டாட்சியர் ரெகோபெயாம் உத்தரவின் பெயரில், தென்காசி வட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில், புளியங்குடி சரக துணை கண்காணிப்பாளர் வானுமாமலை மேற்பார்வையில், கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment