கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 29, 2014

ரஹ்மானியபுரம் கிளை : தர்பியா!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 28/09/2014 ஞாயிற்று கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் 




பொது இடத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட தர்பியா மழையின் காரணமாக மர்யம் பள்ளியில் வைத்து கிளை தலைவர் அமீன் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில்  நடைபெற்றது.

     இதன் துவக்கமாக சகோதரி சபீனா அவர்கள்" 
இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பிறகு மாவட்டபேச்சாளர் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நபி வழியில் தொழுகை பயிற்சி" நடத்தினார்கள். மாநிலப்பேச்சாளர் தாஹா அவர்கள் "பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை" மக்களுக்கு விளக்கினார்.

      நிகழ்ச்சியின் இறுதியாக மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் சகோதரர் MS.சுலைமான் அவர்கள்
 "நபிவழியும் நமது ஜமாத்தும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதற்க்கான ஏற்பாடுகளை ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்!





No comments: