கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 15, 2014

அனைத்து கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 15-10-14  இன்று மாலை ரஹ்மானியபுரம் கிளை மரியம்



பள்ளியில் வைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அக்டோபர் 15 முதல்   நவம்பர் 15 வரை நடைபெற உள்ள தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் பற்றி முக்கிய ஆலோசனையாக எடுத்து கொள்ளப்பட்டது.

     தனிநபர் சந்திப்பு, நோட்டிஸ் வினியோகம், சுவர் விளம்பரம், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்குவது, மக்கள் கூடும் இடங்களில் பேனர்கள் வைப்பது. தெருமுனைப் பிரச்சாரம், மதரசா மாணவ மாணவிகளை வைத்து சைக்கிள் பேரணி போன்ற வழிகளில் பிரச்சாரத்தை ஒரு மாதகாலம் தீவிரமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக துவாஉடன் கூட்டம் நிறைவு பெற்றது.





No comments: