கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 27, 2015

டவுண் கிளை பெண்கள் பயான் மற்றும் ஆலோசனைக் கூட்டம்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், டவுண் கிளை சார்பாக இன்று 25-01-15 ஞாயிறு அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் மர்கஸில்



வைத்து நடைபெற்றது. இதில் சகோ. இஸ்ஹாக் அவர்கள் " நாவடக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். 

     இஷா தொழுகைக்குப் பிறகு அய்யாபுரம் மர்கஸில் வைத்து வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "அல்லாஹ்வை நினைவுகூறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

   மேலும் 
 25-01-15 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் டவுண்கிளை மர்கஸில் வைத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் சகோ. ஃபைசல், சகோ.ஜாஹிர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கிளையின் கடந்த மாத செயல்பாட்டு அறிக்கையை கிளை துணை செயலாளர் வாசித்தார், கிளை பொருளாளர் கடந்த மாத வரவு செலவு கணக்கு விபரங்களை சமர்பித்தார். மேலும் இக்கூட்டத்தில் தாவாவை வீரியப்படுத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

டவுண் கிளையின் புதிய மாணவரணி செயலாளராக சகோ. அப்துல் குத்தூஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இறுதியில் கூட்டம் துஆவுடன் நிறைவானது.




No comments: