டவுண் கிளை சார்பாக 25-02-15 அன்று மாலை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று மத சகோதர,
சகோதரிகளை சந்தித்து ஆறுதல் கூறி தாவா செய்யப்பட்டது. இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு சிறிய அன்பளிப்புகளை வழங்கி இஸ்லாமிய மார்க்கத்தை அறிமுகம் செய்தனர். இந்த சந்திப்பில் பொது மக்களுக்கு தாவா துண்டுப் பிரசுரங்கள், மற்றும் நிக்கோடின் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் மாலை நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "அலட்சியம் வேண்டாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அய்யாபுரம் மர்கஸில் வைத்து நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சியில், இதில் சகோ. ராஸித் அவர்கள் "திருக்குர்ஆனுடன் தொடர்பு கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment