கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 7, 2009

KDNL Meeting

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
       அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 04/09/2009 அன்று துபை ஹோர் அல் அன்ஸ் - ல் வைத்து அஸர் தொழுகை க்குப்பிறகு நடைபெற்றது. முதலில் சகோ.முஹம்மது அலி அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து சகோ.S.S.U. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் கடையநல்லுர் - இல் ஏகத்துவம் எற்படுத்திய மாற்றங்கள், ஏகத்துவ வளர்ச்சிக்கு பெறுந்துனையாக இருக்கும் மஸ்ஜித் முபாரக் - ன் முக்கியத்துவம் பற்றியும் அதன் தற்போதைய நிலை பற்றியும் விளக்கினார்.
        பள்ளியின் இடப்பற்றாக்குறை யினால் அதன் அருகில் இருக்கும் இடத்தை வங்குவது பற்றியும் அங்கு பேசப்பட்டது, அது சம்பந்தமாக நிறைய சகோதரர்கள்  நன்கொடை தருவதக வாக்களித்துள்ளனர்.
       நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமா அத் -ன் செயல்பாட்டு அறிக்கையும், இஸ்லாமிய கல்லூரி சம்பந்தமாக Pamphlet  ம் வழங்கப்பட்டது.
     இறுதியாக  இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் மஃரீப் தொழுகைக்குப் பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
     நிகழ்ச்சியை துபை யை சார்ந்த கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments: