கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 22, 2010

நினைவூட்டல்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்……
ஓர் அழகிய உதாரணம்:
அல்லாஹ்வின் (சட்டவரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறிநடப்பவனுக்கும் வமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும்அவர்கள் கப்பலில்(தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி)அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில்இடமகிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக்கொண்டு வரஅவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது,கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காகநம்முடைய பங்கில்(கீழ்த் தளத்தில்ஓட்டையிட்டுக் கொள்வோம்நமக்கு மேலே இருப்பவர்களைத்தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள்அவர்கள் விரும்பியபடிெய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில்இருப்பவர்கள்அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்அவர்களின்கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்றஅனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். ன்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : நுஃமான் இப்னு பஷீர் (ரலி)
ஆதாரம் : புகாரி 2493 2686 

அன்பான சகோதர்களே ! 

மேலே நான் மேற்க்கொள் காட்டியிருக்கும் ஹதீஸ் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய ஓர் அழகிய உதாரணம். அதில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் வாசகத்தை நன்கு கவணித்துப் பாருங்க! 
நமது ஊரில் ஏதோ ஒரு தெருவில், வீட்டில் நடக்குது நமக்கு என்ன ? என்று நாம் அந்த கப்பலின் மேல் தள வாசிகள் நினைத்து போல் இருந்தால், நாளை அது நமக்கு பாதிப்பில் வந்து தான் நிற்கும்.
ஆக சமூதாயத்தின் மீது அக்கரை கொண்ட அல்ல அல்ல தத்தமது வீட்டின் மீது அக்கரை கொண்ட அனைத்து சகோதரர்களும். கட்டாயம் கீழ்கானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்களின் ஆலோசனை வழங்க வேண்டும். UAE இல்லாத சகோதரர்கள் kdnltntj.uae@gmail.com என்ற முகவரிக்கு கருத்துகளை அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி (23.07.2010)மாலை5.00 மணிக்கு துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) மர்க்கஸில் வைத்து நடைபெறும்தீர்வைத் தேடி நிகழ்ச்சிக்கு அனைத்து கடையநல்லூர் சகோதரர்களையும் அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அபுதாபி : 
சகோ.அப்துல் சலாம் - மொபைல் நம்பர் : 00971556679320
சகோ.ஷாகுல் - மொபைல் நம்பர் : 00971559385536
துபாய் : 
சகோ.முஹம்மது இஸ்ஹாக் - மொபைல் நம்பர் : 00971554725204
சகோ.முஹம்மது நாசர் - மொபைல் நம்பர் : 00971508486296
ஷார்ஜா : 
சகோ.ஷாகுல் - மொபைல் நம்பர் : 00971559905714
அஜ்மான் : 
சகோ.சாதிக் - மொபைல் நம்பர் : 00971558646184

No comments: