அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 08-10-2010.அன்று மாலை அஸர் தொழுகைகுப்பிறகு வெள்ளிக்கிழமை துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் மர்கஸில் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் சகோதரர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது.
அதில் கலந்தாலோசிக்கப்பட்டவை.
- 2010 - ம் ஆண்டு பித்ரா மற்றும் நோன்பு கஞ்சி வகைக்காக இங்கிருந்து அனுப்பிய கணக்கை தலைவர் அவர்கள் சமர்ப்பித்தார்கள்.
- கடந்த செப்டம்பர் மாதம் நமது ஊரில் நடந்த மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளின் செயல்பாட்டு அறிக்கையினை தலைவர் சகோதரர் முஹம்மது அலி வாசித்து காண்பித்தார்கள்.
- நமது ஊரின்ன் தாஃவா பணியின் வளர்ச்சிக்காக இங்கிருந்து நாம் எவ்வாறு எல்லாம் உதவி செய்யலாம் என்பது பற்றி சகோ.முஹம்மது அலி அவர்கள் விளக்கினார்கள்.
- தாயகத்திலிருந்து தொலைபேசி மூலமாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.அப்துல் நாஸிர் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
- குர்பானி சம்பந்தமாக ஊரிலிருந்து கடிதம் வந்த பிறகு அது பற்றி மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்
- தெரு முனைப்பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
- பேட்டை பகுதியிலும் தெரு முனைப்பரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
- மாதாந்திர கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு ஒரு ஆள் நியமிக்க வேண்டும்.
- துண்டு பிரசுரம் மாதம் இரு முறையாவது விநியோகம் செய்ய வேண்டும்.
- வளைகுடாவிலும் தாஃவா பணியை வீரியமாக்க வேண்டும்,அதற்ககாக வளைகுடாவில் ஒரு தாஃவாக் குழுவை ஏற்ப்படுத்த வேண்டும்.அதன் மூலமாக ஊரின் செயல்பாட்டினை அதிகப்படுத்தலாம் எனவும் பேசப்பட்டது
குழு விபரம்
பகுதி | பொறுப்பாளர்கள் |
துபை - தேரா | சகோ.இபுறாகிம் |
ஹோர் அல் ஹன்ஸ் மற்றும் அல் பரகா | சகோ.முஹம்மது அலி, சகோ.இஸ்ஹாக், சகோ.மசூது |
சோனாப்பூர் | சகோ.தாவூத் |
அல்லாஹ்வின் பேரருளால் துஆ வுடன் கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment