
மாவட்ட தலைவரின் ஒப்புதலுடன் 01.01.2010 வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட துணைத் தலைவர் டிஎம். ஜபருல்லாஹ், மாவட்ட நலத்திட்ட செயலாளர் சுலைமான், அமீரக அபுதாபி மண்டல செயலாளர் அப்துஸ் ஸலாம், எம்.எம்.ஸைபுல்லாஹ் எம்ஐஎஸ்சி, டி.ஜே. மசூது ஸாஹிப் (துபை) ஆகியோர் செங்கோட்டை சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தனர்.
அதன் பின்னர் அல் ஹக் நிறுவனர் இஸ்மாயீல் அவர்களை அழைத்து இஸ்லாமிய அமைப்புகள் பல இருந்தும் நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுந்தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இறையச்சத்துடனும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் செயல்படுகிறது. ஆகையால்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தேர்ந்தெடுத்து அதில் இணைய விரும்புவதாகக் கூறினார்.
அத்துடன் நகரின் மையப்பகுதியில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 50 சதுர அடி பரப்பளவுள்ள மர்கஸ், நூலகம், ஆம்ப்ளிபயர். மைக் செட் அனைத்தையும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நகர நிர்வாகிகளிடம் ஒப்படைத்துவிட்டு தான் சாதாரண உறுப்பினராக இருந்து செயல்படுகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நகர நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகளாக துடிப்புள்ள இளைஞர்களை தேர்தெடுத்தனர். தலைவராக பைசல், செயலாளராக மைதீன், பொருளாளராக சதீஸ் என்ற புகாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment