கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக பல்வேறு மார்க்கப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு மார்க்கல்வியையும், ஏகத்துவக் கொள்கையையும் போதிப்பதற்காக 28. 05 . 2011 சனிக்கிழமை முதல் மதரஸதுத் தவ்ஹீத் குழந்தைகள் கல்வியகம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழந்தைகள் மதரஸாவில் 32 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நாட்களில் இந்த எண்ணிக்கை பன்மடங்காகும். கடையநல்லூரைச் சார்ந்த கொள்கைச் சகோதரர்கள் தங்கள் குழந்தைகளை இந்த மதரஸாவில் சேர்த்து சத்தியக் கொள்கையையும் தூய இஸ்லாமிய மார்க்கத்தையும் அவர்கள் கற்று இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கு துணை நிற்பார்களாக.
No comments:
Post a Comment