கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 24, 2012

திரிகூடாபுரத்தில் (சொக்கம்பட்டி)TNTJ ஆலோசனை கூட்டம் மற்றும் கொள்கை பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால் கடையநல்லூரில் த த ஜமாத்தின் தாவா பணிகள் வீரியத்துடன் செயல்பட்டு வருகின்றது, அந்த வகையில் தாவா பணிகள் நமது ஊரில் மட்டும் அல்லாமல் நமதூரை சுற்றியுள்ள மக்களிடமும் கொண்டு செல்லபடுகிறது,

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு மக்கா நகர் கிளையின் சார்பாக திரிகூடாபுரத்தில்(சொக்கம்பட்டி) பெண்கள் பயான் ஏற்பாடு செய்யபட்டு அந்த பகுதியை சார்ந்த பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை இந்த தளத்தில் செய்தியாக வெளிட்டு இருந்தோம். அதன் தொடர்ச்சியாக ....,


தற்போது மீண்டும் 21-09-12  அன்று மஃரிப் தொழுகைக்கு பின் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக  கடையநல்லூர் அருகில் உள்ள திரிகூடாபுரத்தில் (சொக்கம்பட்டி) TNTJ ஒருகினைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் TNTJ  ஏன்? எதற்க்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அதனை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஸலாம் அவர்கள்  சகோதர்கள் கேட்ட மார்க்க மற்றும் ஜமாஅத் சந்தேகங்களுக்கு  பதில் அளித்தார், இதில் அந்த பகுதியை சார்ந்த அதிகமான சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.




No comments: