கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 9, 2013

காயிதேமில்லத் திடலில் பெருநாள் தொழுகை - 09.08.13

கடையநல்லூரில் நோன்பு பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்து மூன்று இடங்களில் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே தொழுகை திடலே நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.40 மணியளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை மாநில பேச்சாளர் மவ்லவி முஹம்மது தாஹா MISC அவர்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் இஸ்லாத்தில் ஹனபி,ஷாபி என்ற பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது,போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது, இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது, ஒருவரை  வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது  என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
  இதில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் மற்றும் பேட்டை கிளை நிர்வாகிகள் அய்யூப் கான்,ஹாஜா மைதீன், ஜலாலுதீன், முஹம்மது அப்பாஸ், குறிச்சி சுலைமான் மற்றும் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
  தென்காசி வட்டாட்சியர் கோட்டூர் சாமி தலைமையில் புளியங்குடி சரக துணை கண்காணிப்பாளர் வானுமாமலை மேற்பார்வையில்,துணை கண்காணிப்பாளர்கள் பிச்சை,சிவநேசன், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் சிவன், முத்துலட்சுமி ஆகியோர் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
  இது போன்று ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் மாவட்ட பேச்சாளர் ரீப் அவர்களும், மக்கா நகர் தவ்ஹீத் திடலில் ஜலால் அவர்களும் பெருநாள் தொழுகையும் அதை தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.

தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம்மாக அரிசி வழங்கப்பட்டது.












No comments: