கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 22, 2016

குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்துக் கிளையின் சார்பில் 22-08-16 (இன்று) மாலை 4:30 மணியளவில் கடையநல்லூர் குடிநீர்பிரச்சனையைக் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கைக் கண்டித்து காலிக்குடங்களுடன் நகராட்சி முற்றுகை மற்றும் பானை ஒடைப்பு போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மேற்குமாவட்டத் தலைவர் சகோ:பைசல் அவர்கள்


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சகோ:சதாம் ஹுசைன் அவர்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பினார்.குடிநீர் பிரச்சனையை சரிசெய்யக் கோரி கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பிறகு மாவட்டத் தலைவர் சகோ:பைசல் அவர்கள் மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளத நகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோதப்போக்கை தனது ஆக்ரோஷமான உரையில் தெரிவித்தார்.

கடையநல்லூர் மக்களின் குடிநீர் பிரச்சனையை சரிசெய்யாவிட்டால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியாளரை சிறைபிடிக்கும் ஆர்பாட்டத்தை அறிவிப்போம் என்றார்.

 இந்த ஆர்பாட்டத்தில்  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களைக் கைது செய்ய வாகனம் இல்லாததால் காவல்துறை கைது நடவெடிக்கையை கைவிட்டது.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.


















No comments: