அல்லாஹ்வின் கிருபையால், 13. 02. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை இஷா தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை அண்ணாநகர் முதல் தெருவில் நடைபெற்றது.
இதில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ், மாவட்ட துணைத் தலைவர் சகோ. டிஎம். ஜபருல்லாஹ் மற்றும் நகர நிர்வாகிகள் சகோ.முஹம்மது கோரி, சகோ.முஹம்மது காசிம்,சகோ. பாவா, சகோ.யூசுப் பைஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ' ஷிர்க், மூடநம்பிக்கைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment