
அந்த கூட்டத்தில் முதலில் சகோ.பஷீர் உமரி அவர்கள் “யூகங்களை பின்பற்றாதீர்கள்” என்ற தலைப்பில் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் வந்திருந்த மக்களுக்கு விளக்கம் அளித்தார்கள். பின்பு கடையநல்லூரில் ஏகத்துவப் பணிகள் வீரியமாக செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியாக ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்ன் பொருளாளர் செய்பு முகைதீன் அவர்களின் வேலை நேர மாற்றத்தின் காரணமாக பொறுப்பை கவனிக்க முடியாத காரணத்தினால் துனைப் பொருளாளாராக சேவநல்லி ஜாஹீர் ஹுசைன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு தூஆ வுடன் இனிதே முடிவடைந்தது. அல்ஹம்த்துலில்லாஹ்.
No comments:
Post a Comment