கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 6, 2014

டவுண் கிளை : ஜனாஸா தொழுகை !

    கலந்தர் மஸ்தான் தெரு கீழ வட்டாரத்தில் உள்ள பக்கீர்லெப்பை ஜாஹிர் ஹுஸைன்,அப்துல் அஜீஸ்,அப்துல் குத்தூஸ் ஆகியோரின் தாயார் இன்று



(06.02.14) வஃபாத் ஆகி விட்டார்கள். அன்னாரது ஜனாஸவை ஏகத்துவ அடிப்படையில் தொழுகை நடத்தி அடக்கம் செய்ய வேண்டும் என்று சவுதியில் உள்ள அவரது மூன்று மகன்களும் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், அன்னாரது ஜனாஸா நமது டவுண் கிளை மர்க்கஸிற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது பேரனும்,டவுண் கிளை தாயியுமான முஹம்மது ஹாலித் தொழுகை நடத்தினார். பின்னர் ஜாமிவுல் அன்வர் பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அனைத்து கிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

    மார்க்கத்தில் பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாம் என்று தெளிவான நபியின் வழிகாட்டுதல் இருந்தும். அதனை மார்க்க அறிஞ்சர்கள் வலியுறுத்தாமல் இருந்த காரணத்தால், பெண்கள்  ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்தனர்.


    தனது தாய், தந்தை, மக்கள், சகோதார் சகோதரிகளுக்கும் நடக்கும் இறுதி தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருக்கின்ற பரிதாப நிலை முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகிறது.  மார்க்கம் சொல்லித்தரும் விதம் பெண்களும் ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் அறிவிப்பு செய்து, முதன் முறையாக 50க்கும் மேற்பட்ட பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..!

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. 

அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் நூல்: ஹாகிம் 1/519

 



No comments: