தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம் (25-04-14) அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இனிதே
நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கமாக மண்டல தாயி சகோ நெய்னா முகம்து அவர்கள் "மறைவான இனைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். பொறுப்பாளர்கள் கிளைகளில் இருந்து பெறப்பட்ட கடிதங்களை சகோதரர்களிடம் படித்து காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கீழ் கண்ட விசயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.
1, கடையநல்லூர் பேட்டை மற்றும் டவுண் கிளை மர்க்கஸ் விரிவாக்கதின் அவசியம் குறித்தும், கோடைகால பயிற்ச்சி வகுப்புகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது,
2, பேட்டை கிளைக்கு ஒப்புக்கொண்ட மீத தொகையை வரும் வாரத்திற்குள் அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
3, மக்கா நகர் கிளை மற்றும் மரியம் கிளையின் தேவைகளையும் எவ்வாறு சரி செய்வது தொடர்பாகவும் வரக்கூடிய அமர்வில் முடிவு எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டு.
இறுதியில் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவு பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment