கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 17, 2014

மக்கா நகர் கிளை மர்க்கஸ் கூரை மேய்வதற்கு பொருளாதார உதவி கோரி!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளையில் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருவதை தினந்தோறும் செய்திகள் மூலமாக



அறிந்து வருகிறோம். குறிப்பாக பெண்கள் பயான் மற்றும் மருத்துவ உதவிகள் அதிகமான அளவிற்கு செய்து வருகிறது. நிர்வாகம் நடைபெற தேவையான பொருளாதாரம் திரட்டவே சிரமமான நிலையிலும் இத்தகைய பணிகள் செய்து வருகிறது.

   இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காற்றால் பெண்கள் பகுதியில் அமைக்கப்பட்ட மேற்கூரை முழுவதுமாக தூக்கி எரியபட்டது. இதனால் பெண்கள் திறந்த வெளியில் தொழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் கிளை நிர்வாகம் அவசரமாக ஒரு சகோதரிடம் இருந்து பொருளாதரத்தை கடனாக பெற்று, தகரத்திலான மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 36,500 ரூபாய் செலவாகி உள்ளது.

    இந்த வகைக்காக நல்லுள்ளம் கொண்ட சகோதர்கள் உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது கிளை நிர்வாகம்.

தொடர்புக்கு :

கிளை தலைவர் சகோ ஜாகிர்     : 00919952112225
கிளை செயலாளர் சகோ சிராஜ் : 00919442079409







  

No comments: