தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூரில் உள்ள கிளைகள் சார்பாக நோன்பு பெருநாள் பித்ரா வினியோகம் கடையநல்லூர் மட்டுமல்லாது அதனை
சுற்றி உள்ள கிராமங்களில் வாழும் முஸ்லிம்களுக்கும் வழங்கபட்டது. கிளை நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெற்றது.
மக்கா நகர் கிளை சார்பாக மக்கா நகர்,சொக்கம்பட்டி, பாம்புகோவில் சந்தை உள்ளிட்ட ஊர்களில் உள்ள சுமார் 525 ஏழை குடும்பங்களுக்கு, அதாவது (ஒரு நபருக்கு 195 ரூபாய் வீதம்) அரிசி மற்றும் மளிகை சாமன்கள் கொடுக்கப்பட்டது.
பேட்டை கிளை சார்பாக ஃபித்ரா பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசியும் 200 ரூபாய் பணமும் சுமார் 540 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பேட்டை மற்றும் வாவா நகரம் ஆகிய பகுதிகளுக்கு வழங்கபட்டது.
ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் ஜூலை 27,28 ஆகிய தினங்களில் பித்ரா பொருட்களும், இறைச்சி வாங்க பணமாகவும், சில ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வேஷ்டி, சேலையும் வினியோகம் செய்யப்பட்டது. ரஹ்மானியாபுரம் பகுதி மட்டுமல்லாமல், மதினாநகர், மிஹ்ராஜ் நகர், EB பகுதி மற்றும் கிராமங்கள் வடகரை, வேதம்பதூர், வலசை,கண்மணியாபுரம் இன்னும் சில கிராமங்களுக்கும் சென்று ஏழைகளுக்கு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.
டவுண் கிளை சார்பில் டவுண் பகுதி மற்றும் கடையனல்லுரை சுற்றி உள்ள கிராமங்களிலும் சுமார் 4000 குடும்பங்களுக்கு 5கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.
சுற்றி உள்ள கிராமங்களில் வாழும் முஸ்லிம்களுக்கும் வழங்கபட்டது. கிளை நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெற்றது.
மக்கா நகர் கிளை சார்பாக மக்கா நகர்,சொக்கம்பட்டி, பாம்புகோவில் சந்தை உள்ளிட்ட ஊர்களில் உள்ள சுமார் 525 ஏழை குடும்பங்களுக்கு, அதாவது (ஒரு நபருக்கு 195 ரூபாய் வீதம்) அரிசி மற்றும் மளிகை சாமன்கள் கொடுக்கப்பட்டது.
பேட்டை கிளை சார்பாக ஃபித்ரா பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசியும் 200 ரூபாய் பணமும் சுமார் 540 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பேட்டை மற்றும் வாவா நகரம் ஆகிய பகுதிகளுக்கு வழங்கபட்டது.
ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் ஜூலை 27,28 ஆகிய தினங்களில் பித்ரா பொருட்களும், இறைச்சி வாங்க பணமாகவும், சில ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வேஷ்டி, சேலையும் வினியோகம் செய்யப்பட்டது. ரஹ்மானியாபுரம் பகுதி மட்டுமல்லாமல், மதினாநகர், மிஹ்ராஜ் நகர், EB பகுதி மற்றும் கிராமங்கள் வடகரை, வேதம்பதூர், வலசை,கண்மணியாபுரம் இன்னும் சில கிராமங்களுக்கும் சென்று ஏழைகளுக்கு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.
டவுண் கிளை சார்பில் டவுண் பகுதி மற்றும் கடையனல்லுரை சுற்றி உள்ள கிராமங்களிலும் சுமார் 4000 குடும்பங்களுக்கு 5கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment