கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 21, 2015

டவுண் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

 துண்டுப் பிரசுரம் வினியோகம்!
  15-04-15 அன்று  காலை கடையநல்லூர் புதிய பேருந்துநிலையத்தில் வைத்து சரியாக 8:00 மணி முதல் "விண்ணிலிருந்து வந்த ஒளி (திருமறைக்குர்ஆன்)" 

என்ற தலைப்பிலான நோட்டீஸ் மாற்றுமத நண்பர்களுக்கும், கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகளிடமும் வினியோகம் செய்யப்பட்டது.
   இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு மாற்று மத அன்பர்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். வயதானவர்கள் முதற்கொண்டு அதிகமான மக்கள் வாங்கி ஆர்வமுடன் படித்தனர்.



தெருமுனைப் பிரச்சாரம் :
     டவுண் கிளை சார்பாக 16-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் வானுவர் தெரு மேற்கு பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "தர்மம் நரகத்தின் கேடயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


பெண்கள் பயான்:
      18-04-15 இன்று அஸர் தொழுகைக்குப்பிறகு டவுண்கிளை மர்கஸ்ஸில் வைத்து நடைபெற்ற பெண்கள் பயானில் சகோ. நியாஸ் அவர்கள் "நல்லொழுக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.




No comments: