கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 21, 2015

மதினா நகர் கிளை தர்பிய மற்றும் நிகழ்ச்சிகள்!

தர்பியா நிகழ்ச்சி :
     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மதினா நகர் கிளை சார்பாக 19-04-15 அன்று காலை 10 மணி முதல் கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்)

வைத்து தர்பியா எனும் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார். பின்னர் மாவட்டப் பேச்சாளர் சகோ. சதாம் உசேன் அவர்கள் "போலி ஒற்றுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
    மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில பேச்சாளர் சகோ. ஜமால் உஸ்மானி அவர்கள் "அன்பான அழைப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. தாஹா அவர்கள் கலந்து கொண்டு சகோதரர்கள் மற்றும் தாய்மார்களின் மார்க்க சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
   இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் மற்றும் தாய்மார்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.





தாயிக்கள்(மார்க்க பிரச்சாரர்கள்) ஆலோசனைக் கூட்டம்!
     கடையநல்லூர் அனைத்து கிளைகளின் தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம் 20-04-15 அன்று  மாலை மதினா நகர் மஸ்ஜித் ரஹ்மானில் வைத்து மாவட்ட துணை செயலாளர் சகோ ஜாகீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
     இதில் நடைபெற இருக்கின்ற கோடைக்கால பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்துவது மற்றும் தாயிக்களின் பங்களிப்பு செய்வது பற்றி விரிவாக ஆலோசனை செய்யபப்ட்டது.


No comments: