கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 28, 2015

ரஹ்மானியபுரம் கிளை : ஜனாஸா தொழுகை!

    கடையநல்லூர் ரஹ்மானியபுரம் இரண்டாவது தெருவை சார்ந்த. செய்யதுதரகன் முகைதீன்பிள்ளை(72) அவர்கள் 27-7-15 அன்று இரவு 

9மணிக்கு மரணம் அடைந்துவிட்டார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு அவரின் வீட்டு வாசலில் வைத்து நபி வழிப்படி அவரின் இளையமகன் சகோ.செய்யது மசூத் சாகிப் தொழுகை நடத்ததினார். அதன் பின்னர் ரஹ்மானியாபும் நயினாமுகம்மது ஜும்ஆ பள்ளிவாசல் மைய்யா வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சார்ந்த ஜமாஅத்தார்கள், பெண்கள் உட்பட அதிகமானர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
அன்னாரின் மறுமை வாழ்க்கைகாக பிரார்த்திக்கவும்.
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்
பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி) நூல்: முஸ்லிம் 1600




No comments: