கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2015

ரஹ்மானியாபுரம் கிளை பட்டமளிப்பு நிகழ்ச்சி & மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நெல்லை மேற்கு மாவட்டம், கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக (05/09/2015) அன்று மாலை மஃரிப் 

தொழுகைக்குப் பிறகு "ரஹ்மானியா" பெண்கள் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி மஸ்ஜிதுல் மர்யம் அருகில் உள்ள திடலில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் சகோ. ஃபைசல் அவர்கள் தலைமை ஏற்றார். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்டத் தலைவர் சகோ. ஃபைசல் அவர்கள் "புளூகிராஸிர்க்கு எச்சரிக்கை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன் பிறகு மதரஸா மாணவியருக்கான பட்டிமன்ற நிகழ்ச்சி "இஸ்லாம் பெண்கள் உரிமையை பறிக்கிறதா? அல்லது கொடுக்கிறதா?" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் நடுவராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
அதைத் தொடர்ந்து மாநிலப்பேச்சாளர் சகோ. முஹம்மது தாஹா misc அவர்கள் "இன்றைய முஸ்லிம் பெண்களுக்கு தேவையான கல்வி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் கிளைத் தலைவர் சகோ. அமீன் பொதுக்கூட்டத் தீர்மானங்களை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாநிலத் தணிக்கைக்குழு உறுப்பினர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் misc அவர்கள் காவி வெறிபிடித்துத் திரியும் புளூகிராஸ் அமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்ததோடு "மறுமை வெற்றிக்கு மாநபி வழியா..? மத்ஹபு வழியா...?" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மேலும் ரஹ்மானியா பெண்கள் அரபிக்கல்லூரியில் மூன்று ஆண்டு அரபிப் பாடம் படித்த மாணவிகள் மூன்று பேருக்கு பட்டங்களை சகோ. ரஹ்மத்துல்லாஹ் misc வழங்கினார். பின்னர் மதரசா மாணவ மாணவிகளுக்கான ஆண்டுவிழாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக கிளைச் செயலாளர் சகோ. முஜாஹித் அவர்கள் நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகள் ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.










No comments: