கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2015

ரஹ்மானியாபுரம் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தீர்மானங்கள் !

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 05.09.2015 அன்று மாலை  6.30 மணியளவில் மர்யம் பள்ளி திடலில் தலைவர்அல்அமீன் தலைமையில் 



மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ.அமின் அவர்கள் தீர்மானங்களை வாசித்தார் 

1)   
முஸ்லீம்களின் பண்டிகை காலங்களில் மட்டும் விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்று வேஷம் போட்டு முஸ்லீம்விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் புளூ கிராஸை மத வெறிப்பிடித்த புளூ கிராஸை இப் பொதுக்கூட்டம் வாயிலாகவன்மையாக கண்டிக்கிறோம்.
2)   கடையநல்லூர் தாலூகா அலுவலக நிரந்தர கட்டிடத்தை பொதுமக்கள் நலன் கருதி நகரின் மையப்பகுதியில் அமைத்திடமாவட்ட நிர்வாகத்தை இப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3)       இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின் தற்போதைய அறிக்கைபடி உயந்துள்ள முஸ்லீம்களின் விகிதாரசார அடிப்படையில்மத்தியமாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு அரசு வேலைவாய்ப்புகளின் முஸ்லீம்களின் இட ஓதுக்கீட்டைஅதிகப்படுத்திட இப் பொதுக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
4)   கடையநல்லூரில் தொடர்ந்து முஸ்லீம் அதிகாரிகள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்படுவதைகண்டிப்பதுடன் மத்திய,மாநில அரசுகள் இச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இப் பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
5)   கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 32வது வார்டு தெருக்களும், நடைபாதைகளும் சீர்செய்யப்படாமல் குண்டும், குழியுமாக இருபதாலும், இதுவரை கலர் செங்கல்கள் பதிக்காத காரணத்தாலும் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் மிகவும் சிரமப்படுகிறார் ஆகையால் உடனடியாக இத் தெருக்களில் கலர் செங்கல்கள் பதிக்க நகராட்சி நிர்வாகத்தை இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
6)   இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ்ஜூப் பெருநாள் அன்று குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் இரத்தத்தை குழி தோண்டி பூமிக்குள் ஓடவிட்டு மூடிவிடும்படியும் அதன் மீது கிரிமிநாசி பொடியை (பிளிசிங் பவுடரை) போட்டு சுகாதாரத்திற்கு உதவுமாறு இஸ்லாமிய பொதுமக்களை இந்த பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


No comments: