கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2015

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனை கூட்டம்

 ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனை கூட்டம் 4. 09.2015 வெள்ளிக்கிழமை அன்று ( தவ்ஹீத் மன்ஸில் ) வைத்து 


சகோ, சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார் .
இதில் மண்டல பேச்சாளர் பீர் முஹம்மது அவர்கள் " எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .
இந்த ஆண்டு ஃபித்ரா தொகை ( 1.0,7,033 ) ஒரு லட்சத்தி ஏழாயிரத்தி முப்பத்திமூணு ரூபாய் .மேலும் நோன்பு கஞ்சி தொகை 63, 000 ஆயிரம் ரூபாய் அனைத்துக் கிளைக்கு பகிர்ந்துக் குடுக்கப்பட்டது.
தீர்மானங்கள். ....
1 - ஊரிலுள்ள ஒரு குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி இந்திய பணம் 30, 000 ஆயிரம் குடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது .
2 - பஜார் கிளைக்கு 10, 000 ஆயிரம் குடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பஜார் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பான முறையில் பணிகளை செய்து வருகிறார்கள் இன்னும் பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.
3 - ஃபித்ரா மற்றும் நோன்பு கஞ்சி வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யப்பட்டது. அல்ஹம்துல்லாஹ் .


No comments: