கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 19, 2010

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் பேட்டை அக்ஸா மாணவர்கள் குழு இணைந்து நடத்திய மாபெரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

டையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் பேட்டை அக்ஸா மாணவர்கள் குழு இணைந்து நடத்திய மாபெரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கருத்தரங்கம் அக்ஸா பள்ளிவாச­ல் 12.06.2010 அன்று நடைபெற்றது. நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முஹம்மது காஸிம் மாவட்டத் துனைத்தலைவர் முஹம்மது ஜபருல்லாஹ் மாவட்ட அரசு திட்ட செயலாளர் குறச்சி குளம் சுலைமான் அக்ஸா பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அபூஸா­ஹ் சேக் ஆசிரியர் முஹம்மது உசேன் ஆகியோர் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். சிறப்பு விருந்தினராக சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னால் முதல்வர் முனைவர் பேராசியர் செய்யது உதுமான் அவர்கள் கலந்து கொண்டு கல்வியின் அவசியத்தைப்பற்றி உரை நிகழ்த்தினார்.



இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி செயலாளர் எம் சித்தீக் அவர்கள் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் குறைந்த செலவில் உயர் கல்வி பெருவது எப்படி அரசின் கல்வி உதவி திட்டங்களை பெருவது எப்படி வேலைவாய்ப்புக்கான தகுதிகள் என்ன? மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பதைப் பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார். இறுதியில் மாணவர்களின் சந்தேகங்களுங்களுக்கு பதில் சொன்னார்.


இந்தக்கருத்தரங்கில் 160 மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியை அக்ஸா மாணவர்கள் குழு மிக சிறப்பாக செய்திருந்தது.










No comments: