விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஷரசு மருத்துவமனை இணைந்து அரசு மகப்பேறு மருத்துவமனையில் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் தலைமையேற்று இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பஷீருத்தீன் நெல்லை மாவட்ட அரசு நலத்திட்ட செயலாளர் குறிச்சிகுளம் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஜான் பாட்சா வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜே. முத்தையா பாண்டியன் அவர்கள், சமூக சேவகர் ராமராஜ் அவர்கள், சாய் ரத்த வங்கி தலைவர் டாக்டர் தியாகராஜன் அவர்கள் பி.ஏ.சி.ஆர். இரத்த தான கிளப் மெடிக்கல் ரவி அவர்கள், அரசு மருத்துவர்கள் டாக்டர் பால்சாமி, டாக்டர் குமரேசன், டாக்டர் நூர்தீன், அரசு ரத்த வங்கி கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் ரத்த தானத்தை நகர மருத்துவர் அணி செயலாளர் அக்பர் அலி அவர்கள் வழங்கினார்.
இரத்த தான முகாமில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட காரணத்தால் 40 நபர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனை மூலம் இரத்த தானம் வழங்கப்பட்டது. மீதி நபர்களில் இரத்த வகைகளை கண்டறிந்து விட்டு அவசர தேவை ஏற்படும் போது அழைக்கப்படும் என்று அரசு மருத்துவர்கள் கூறியதால் குறைந்த நபர்களின் இரத்தம் மட்டுமே சேமிக்கப்பட்டது.
இரத்தம் கொடுத்த அனைவருக்கும் அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களும் சிடிக்களும் வழங்கப்பட்டது.
சுலைமான்
கடையநல்லூர்
No comments:
Post a Comment