கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 28, 2012

ரியாத்தில் கொள்கை சங்கமம்

                           அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-10-12 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு சகோதரர் S.A  ஜாஹிர் ஹீஸைன் தலைமையில் ரியாத்தில் உள்ள கடையநல்லூர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் கடையநல்லூர் tntj வின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் மாமருந்து என்ற தலைப்பில் சகோதரர் துறாப்ஷா அவர்கள் சிறப்பான உரைநிகழ்தினார் அதைனை தொடர்ந்து சகோதரர் ஜாஹிர் அவர்கள் வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார்.
இறுதியில் இபுறாகிம் நபியின் தியாகம் மற்றும் புதிய பள்ளி கட்டுவதின் அவசியம், நம் ஜமாத்தின் பணிகளுக்கு நாம் செய்ய வேண்டிய ஒத்துளைப்புகளை பற்றி சகோதரர் அப்துல் காதர் அவர்கள் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தார்கள்.
அமர்வில் கலந்து கொண்ட சகோதரர் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் தங்களின் கருத்துகளை பதியவைத்தார்கள்.இறுதியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானங்கள்



1. புதிதாக நியமித்துள்ள டவுன் கிளை தவ்ஹீத் பள்ளியின் இமாம் அவர்களின் வீட்டு வாடகைக்கு மாதம் 1000 ரூபாய் ரியாத் சார்பாக வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
2. பெண்களிடம் அதிலும் குறிப்பாக கொள்கை சகோதரிகளிடம் மார்க்க விழிப்புணர்வும் ஐக்கியமும் ஏற்படுத்துவதற்க்காக மாதாந்திர பெண்கள் பயான் மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது.
3. பள்ளி கட்டும் வகைக்கு இன்னும் அதிக நபர்களை சந்தித்து வசூல் செய்வது
4. தனிநபர்களின் சந்திப்பின் மூலம்  தாஃவா பணிகள் செய்வது
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இறுதியில் துவாவுடன் அமர்வு நிறைவேற்றப்பட்டது
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்க்கே









No comments: