4-5-13 அன்று மாலை கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் வைத்து ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் மார்க்க விளக்க கூட்டம் கிளை தலைவர் சகோ அமீன் அவர்கள்
தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பேச்சாளர் சகோ தாஹா MISC அவர்கள் "தீன்குலபெண்மணி" உரையாற்றினார். மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மரியம் பள்ளியில் பயிலும் மக்தப் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருள்களும் வழங்கி "சத்தியத்தை சொல்லி அசத்தியத்தை வெல்லுவோம்"என்ற தலைப்பில் தலைமை உரையாற்றினார்.
இதில் ஏரளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மேலும் நிகழ்ச்சி நடந்த திடலில் இணையதள வசதி சரியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் முன்கூட்டியே அறிவிப்பு செய்யாவிட்டாலும் நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடத்தில் www.onlinepj.com மற்றும் www.tntjtv.com ஆகிய இணையதளங்கள் வழியாக ஒளிபரப்ப முயற்சி செய்து சிறப்பாக அமைந்தது. கடையநல்லூர் நிகழ்ச்சி இதுவே முதல் முறையாக ஒளிபரப்பபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணைய தளங்கள் வழியாகவும் நூற்றுகணக்கானோர் கண்டு பயன்பெற்றனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
தீர்மானங்கள் :
மேலும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்த படி மத்தியில் 10% தனி இட ஓதிக்கிடும், மாநிலத்தில் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் 7% உயர்த்தி தருவதாக அறிவித்ததை நிறைவேற்றி தருமாறும். கடையநல்லூரில் நகராட்சியின் சார்பாக நடைபெற்று வரும் பணிகளில் உள்ள முறைகேடுகள் மற்றும் வரி விதிப்புகளில் உள்ள குறைபாடுகள் ஆகிய இன்னும் சில முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றபட்டன.
இந்நிகழ்ச்சியில் அனைத்து கிளை நிர்வாகிகளும், தொண்டரணியினரும் கலந்து கொண்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பேச்சாளர் சகோ தாஹா MISC அவர்கள் "தீன்குலபெண்மணி" உரையாற்றினார். மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மரியம் பள்ளியில் பயிலும் மக்தப் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருள்களும் வழங்கி "சத்தியத்தை சொல்லி அசத்தியத்தை வெல்லுவோம்"என்ற தலைப்பில் தலைமை உரையாற்றினார்.
இதில் ஏரளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மேலும் நிகழ்ச்சி நடந்த திடலில் இணையதள வசதி சரியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் முன்கூட்டியே அறிவிப்பு செய்யாவிட்டாலும் நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடத்தில் www.onlinepj.com மற்றும் www.tntjtv.com ஆகிய இணையதளங்கள் வழியாக ஒளிபரப்ப முயற்சி செய்து சிறப்பாக அமைந்தது. கடையநல்லூர் நிகழ்ச்சி இதுவே முதல் முறையாக ஒளிபரப்பபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணைய தளங்கள் வழியாகவும் நூற்றுகணக்கானோர் கண்டு பயன்பெற்றனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
தீர்மானங்கள் :
மேலும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்த படி மத்தியில் 10% தனி இட ஓதிக்கிடும், மாநிலத்தில் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் 7% உயர்த்தி தருவதாக அறிவித்ததை நிறைவேற்றி தருமாறும். கடையநல்லூரில் நகராட்சியின் சார்பாக நடைபெற்று வரும் பணிகளில் உள்ள முறைகேடுகள் மற்றும் வரி விதிப்புகளில் உள்ள குறைபாடுகள் ஆகிய இன்னும் சில முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றபட்டன.
இந்நிகழ்ச்சியில் அனைத்து கிளை நிர்வாகிகளும், தொண்டரணியினரும் கலந்து கொண்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
1 comment:
மாஷாஅல்லாஹ்
Post a Comment