கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 14, 2013

நடவடிக்கை எடுக்க கோரி போஸ்டர்கள்!

     அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். மேலும், சில வாசகங்களையும் அதில் பதிவு செய்திருந்தார்.
     'இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத்'


என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும் அதில் இருந்தன. நாங்கள் பாகிஸ்தான் ஹாக்கர்ஸ் க்ரூ. எங்களுக்கு நீதியும், அமைதியும் தேவை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இவ்வாறு முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி தமிழகத்தில் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற திட்டம் தீட்டும் விதமாக நடந்து கொண்டனர். தமிழக காவல் துறையின் துரித நடவடிக்கையால் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கைது செய்தனர்.

    முஸ்லிம்கள் மீது பழிபோட நினைக்கும் செயலை கண்டித்து TNTJ சார்பில் தமிழகம் முழுவது தமிழக அரசுக்கு கோரிக்கை விடும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நெல்லை மாவட்டம் சார்பில் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் கடையநல்லூரில் ஒட்டப்பட்டுள்ளது.


No comments: