22-4-14 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகளை சார்பில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து
இரு சக்கர வாகன பேரணி. கடையநல்லூர் இக்பால் நகர் பகுதியில் இருந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது நகரின் முக்கிய வீதிகளான, பெரிய தெரு, புதுத் தெரு, பஜார் வீதி, அய்யாபுரம் தெரு, பேட்டை & ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் ஆகிய பகுதிகளில் தென்காசி நாடளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு டி.வி சின்னத்தில் வாக்குகளை கேட்டு நூற்றுக்கணக்கான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் கடையநல்லூர் நகர் முழுவதும் வீதி, வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு டவுண் கிளை தலைவர் அய்யூப்கான் அவர்கள் தலைமை தாங்கினார், இதில் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் அப்பாஸ், அமீன், ஜாகீர், ஹாஜா, நிரஞ்சர் ஒலி, சிராஜ், இஸ்ஹாக், மற்றும் மாணவரணி, தெண்டரணி, மருத்துவரணி ஆகியோர் கலந்து கொண்டனர். இறிதியாக அபுதாபி மண்டல நிர்வாகி இப்ராகீம் அவர்கள் நன்றி கூறினார்கள்.
No comments:
Post a Comment