கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 23, 2014

துபாய் ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்களின் நிர்வாகம் சார்பாக மாதந்திர ஆலோசனைக் கூட்டம் 20-06-14 அன்று மாலை




துபாய் தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் கடையநல்லூர் கிளைகளில் நடைபெற்ற பணிகள் பற்றி பொறுப்பாளர்கள் விளக்கி கூறினார். 

தீர்மானங்கள் :

1. நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வகைக்காக வசுலிக்கப்படும் தொகையை கிளை கள், மாவட்டம், மாநில நிர்வாகத்திற்கு பகிரிந்து வழங்குவது.

2. வரக்கூடிய ரமலானில் தாயகத்திலிருந்து வருகை தரும் சகோ.தாஹா MISC அவர்களை வைத்து இப்தார் நிகழ்ச்சி நடத்துவது.

3. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை ஒரு கிளை என்ற அடிப்படையில் கிளைகள் சார்பில் மருத்துவமனையில் தங்கி உள்ள நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து  தாவா செய்யுமாறு கிளைகளை கேட்டு கொள்கிறது.

4. அடுத்த மாதம் நடைபெறும் மாதந்திர ஆலோசனைக் கூட்டத்தில் புதிய ஒரு பொறுப்பாளரை தேர்வு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

5. டவுண் கிளைக்கு இடம் வாங்கும் வகைக்கு மாநில தலைமையின் பரிந்துரை கடிதம் இருந்தால் வசூல் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும், ஆகையால் கிளை நிர்வாகம் உடனே  பரிந்துரை கடிதம்அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறது.

இறுதியில் துவாஉடன் கூட்டம் நிறைவு பெற்றது.



No comments: