கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 2, 2014

ரியாத் ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி!

        ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 31-10-14 அன்று மாலை ரியாத்தி தவ்ஹீத்



செயலகத்தில் சகோ. செய்ப்பு முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் உசேன் அவர்கள் "சாந்தி மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பிலும் சகோ துராப்ஷா அவர்கள் சோதனையின்றி சொர்க்கம் இல்லை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கிளைகளில் நடைபெற்ற செயல்பாடுகள் மற்றும் கிளை நிர்வாகங்கள் அனுப்பிய வரவு செலவு விவரங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


   1) உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்ட தீவிரவாதி என்ற போக்கை மாற்றுவதற்கு மாநில தலைமை அறிவித்த பிரச்சார திட்டத்தை சிறப்பாக செய்வது.

   2) புதியதாக துவங்கப்பட்டு மதினா நகர் கிளைக்கு மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவது.

   3) தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரமாக  கடையநல்லூரில் உள்ள அனைத்து கிளைகளும் ஒன்றாக சேர்ந்து மிக சிறப்பாக செயல்படுத்துவதற்கு நன்றியை தெரிவித்து கொண்டு துவா செய்கிறது.

இறுதியாக துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.  





No comments: