கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 27, 2014

கடையநல்லூர் நகராட்சி ஆணையரிடம் மனு!

       கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் அமைந்துள்ள, பொட்டல் தெரு மற்றும் இல்லத்தார் தெரு (மாவடிக்கால்) ஆகிய தெருக்களை இணைக்கும்


பாலம் பழுதடைந்த காரணத்தால் சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மூலம் பாலம் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
     இதனை கருத்தில் கொண்டு (27-11-14) இன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று பாலம் கட்டும் பணிகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.
    இதற்க்கான நடவடிக்கைகளை எடுப்பதாக நகராட்சி ஆணையர் கூறி உள்ளார்.



No comments: