கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 22, 2014

பேட்டை கிளை மருத்துவ உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மருத்துவ உதவியாக  கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமத்தை சார்ந்த சிதம்பர வடிவு (வயது 70 ) கணவரால் 

கைவிடப்பட்ட அவருடைய மகள் முத்து லட்சுமி (வயது 40), இவர் மிகவும் வறுமையான குடும்பத்தை சார்ந்தவர் தன்னுடைய வயதான தாயின் அரவணைப்பில் தற்போது உள்ளார்.
      இவர் கடந்த சில வருடங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார், இவரால் எந்தவித வேலையும் செய்ய இயலாத நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனித நேய சமுதாய பணிகளை கேள்விப்பட்டு மருத்துவ உதவிக்காக கடையநல்லூர் பேட்டை கிளையே அணுகினார். அதன் அடிப்படையில் கிளைகளின் வசூல் செய்த உதவி தொகையை முதல் கட்டமாக ரூ.14,000 தை கிளை பொருளாளர் மைதீன் வழங்கினார். அப்பொழுது மருத்துவ அணி செயலாளர் உசைன் தொண்டரணி செயலாளர் சித்திக் மற்றும் செய்தித் தொடர்பாளர் குறிச்சி சுலைமான், போகநல்லூர் கிராம முக்கியஸ்த்தர்கள் உடனிருந்தனர்.
     அப்பொழுது அக்கிராமத்தை சார்ந்தவர்கள் அரசங்கத்தால் கொடுக்கப்படும் முதியோர் மற்றும் விதவைக்கான அரசு வழங்கும் மாதந்திர உதவி தொகையை தகுதியான இவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியில் அரசு அதிகாரிகளை அணுகி பெற்று கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
படம் மற்றும் செய்தி : சகோ.குறிச்சி சுலைமான்

No comments: