இன்று(29-01-15) காலை 10 மணியளவில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட
மூலிகை சாரை மாணவிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பில் வழங்கபட்டது.
12வது முகாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியரூபவதி அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்கள். மற்றும் ஆசிரியர்கள் சுரேஷ், முருகேஷன், முத்துசாமி, முகம்மது இக்பால், சன்முகபாண்டி, முத்துலஷ்மி, சாந்தி கிருஸ்டேபர், வளர்மதி, செந்தாமரை செல்வி மற்றும் தீயணைப்பு மீட்பு அலுவலர் மில்டன் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பேட்டை கிளை மகளிரணியை சார்ந்த சகோதரிகள் 2000 மாணவிகளுக்கு நில வேம்பு கசாயத்தை வினியோகித்தனர்.
இதில் கிளை நிர்வாகிகள் அப்பாஸ், நிரஞ்சர் ஒலி, அப்துல் காதர், பிலால் சித்திக், முகம்மது சித்திக் மற்றும் மாநில பேச்சாளர் தாஹா மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேட்டை மருத்துவரணி செயலாளர் உசைன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
செய்தி : குறிச்சி சுலைமான் – கடையநல்லூர்.
No comments:
Post a Comment