கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 31, 2015

டவுண் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரச்சாரம் : 

(27-03-15) அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு பரசுராமபுரம் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் 



அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


மருத்துவ உதவி:
      30-03-15, திங்கள் அன்று மேலக்கடையநல்லூர் பகுதியைச் சார்ந்த, ஒரு விபத்தில் கையில் பலத்த காயம் ஏற்பட்ட மாற்றுமத சகோதரர் (கொத்தனார் வேலை செய்பவர்) ஒருவருக்கு ஆபரேசன் செய்வதற்காக ரூ.5000/- மருத்துவ உதவியை கிளை தலைவர் அவர்கள் வழங்கினார்.


பெண்ளுக்கான தொழுகைப்பயிற்சி :
     29-03-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு கிளை மர்கஸில் வைத்து பெண்களுக்கான தொழுகைப்பயிற்சி நடத்தப்பட்டது. இதில் சகோ. நயீம் அவர்கள் பயிற்சி அளித்தார். இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இறுதியாக பெண்கள் தொழுகை சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

தெருமுனை பிரச்சாரம்:
  30-03-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மெஹ்மூதா நகர் பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் நடைபெற்ற. இதில் கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.





No comments: