டவுண் கிளை தெருமுனைப் பிரச்சாரங்கள் :
02-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு புதுத்தெரு மேற்கு பகுதியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. மைதீன்
அவர்கள் "இறந்தவர் இறைவனாகமாட்டார்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
03-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெற்கு அய்யாபுரம் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "மாற்றம் காண்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
டவுண் கிளை நிதி உதவி!
இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்ற ஊரில் புதிதாக கட்டப்படுகிற தவ்ஹீத் மர்கஸிர்க்கு டவுண் கிளை சார்பாக 05-04-15 ஞாயிறு அன்று நான்கு நேர தொழுகை வக்துகளில் மக்களிடம் வசூல் செய்து ரூ. 6000/- பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டது.
மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்:
கிளை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 05-04-15, ஞாயிறு மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு கிளை நிர்வாகிககள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கிளை துனைச்செயலாளர் சகோ. ஜப்பார் அவர்கள் கடந்த மாதம் நடந்த பணிகள் பற்றியும் கிளை பொருளாளர் சகோ. ஹைதர் அவர்கள் கடந்த மாத வரவு செலவு கணக்குகளையும் உறுப்பினர்கள் முன்பு வாசித்துக்காட்டினர்.
No comments:
Post a Comment