ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம், 10-04-15 அன்று மாலை ரியாத்தில் தவ்ஹீத்
மர்க்ஸில் வைத்து, சகோ.ஏ.எஸ். முஹம்மது மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் அப்துல் ஹக் அவர்கள் "மீடியாக்களின் முஸ்லிம்களுக்கு எதிரான சதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) ரியாத்தில் வாழும் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களிடம்மிருந்து ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருமானத்தில் இருந்து கணக்கிட்டு ஜகாத் தொகையை வசூல் செய்வது.
2) ஜகாத் நிதிக்காக தனியாக பைத்துல்மால் உருவாக்குவது.
3) நமதூர் கிளைகளில் நடைபெற உள்ள கோடைகால நிகழ்சிகளுக்கு பொருளாதரா உதவிகள் செய்வது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment