கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 15, 2015

மதினா நகர் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

பெண்கள் பயான் :
    09-04-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" என்ற 
தலைப்பில் உரையாற்றினார்.

மருத்துவமனை நோயாளிகள் சந்திப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், மதினா நகர் கிளை சார்பாக இன்று (12-04-15) காலை 10.30 மணியளவில் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று நலம் விசாரித்து, ஆறுதல் கூறப்பட்டது.
இதில் மதினா நகர் கிளை சார்பாக தலைவர், செயலாளர், பொருளாளர் 

மற்றும் மாணவரணி சகோதரர்கள் கலந்து கொண்டனர். மேலும் அங்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பழவகைகள் வழங்கினர்.
நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி, இஸ்லாத்தை பற்றி அறிமுகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியினை நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மாற்றுமத தாவா!
11-04-15 அன்று மாற்றுமத தாவா நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரி சகோ.கருப்பசாமி மற்றும் சகோ.கணேஷ் ஆகியோரிடம் சகோ.அல்தாபி எழுதிய "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற புத்தகம் மற்றும் குர்ஆன் மொழியாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது.


தெருமுனை பிரச்சாரம்!
11/4/2015) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மது அலி தெருவில் வைத்து தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ .காலித் (எது சத்தியம்) என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்.




No comments: