கடையநல்லூர் மதினா நகர் கிளையின் சார்பாக "கோடைகாலப்பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி" மாவட்டச்செயலாளர் சகோ பைசல் தலைமையில்
16/05/2014 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு மதினாநகர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளி இமாம் சகோ காலித் அவர்கள் "பிள்ளை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...பிறகு மாவட்டப்பேச்சாளர் சகோ நயீம் அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம் " என்ற தலைப்பிலும், மாவட்டப்பேச்சாளர் சகோ சதாம் ஹுசைன் அவர்கள் "பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
மாநிலப்பேச்சாளர் சகோ தாஹா அவகள் "தவ்ஹீத் ஜமா அத் செய்தது என்ன" என்பது குறித்து உரை நிகழ்த்தினார்,
நிகழ்ச்சியின் இறுதியாக கோடைகால பயிற்சி வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியாக கோடைகால பயிற்சி வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன..அதிகமான சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment