கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 17, 2015

பேட்டை கிளையில் துவங்கி உள்ள கோடைகால பயிற்சி வகுப்புகள்!

     கோடைகால விடுமுறையை மாணவ,மாணவிகள் பயனுள்ள வழியில் கழித்திட முதல் முறையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் 

அறிமுகப்படுத்தியுள்ள பாடதிட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்பு இந்த வருடம் கடந்த 16.5.2015 சனிக்கிழமை முதல் துவங்கியது ஆண்களுக்கும் பெண்களுக்கு தனி தனியே காலை 9 மணி முதல் 1.00 மணிவரையில் புளியமுக்குதெரு மேற்கில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் நூர் மற்றும் அருகில் உள்ள வீடுகளிலும் இஸ்லாமிய கல்லூரியிலும் நடைபெறுகிறது.
    ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் 15 வகுப்புகளாக பிரித்து பெண்கள் வகுப்புகளை பெண்களும் ஆண்கள் வகுப்புகளை ஆண்களும் பாடம் நடத்துகிறார்கள் இதில் சென்ற வருடங்களை விட 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பயிற்சி வகுப்பிற்கு வருகிறார்கள்.

     இங்கு நடத்தப்படும் பாடங்கள் மற்றும் பயிற்சிகள் ★இஸ்லாமிய கொள்கை விளக்கம்
★திருக்குர்ஆன் சிறிய சூரா துஆக்கள் மனனம்
★தொழுகைச்சட்டம்,பயிற்சி
★நபிகள் நாயகம் வரலாறு
★நடைமுறை ஒழுக்கம்
★நற்பண்புகள் மற்றும் தீய பண்புகள் ஆகியவை போதிக்கப் பபடுகிறது .இதுபோன்று நகர் முழுவதும் அனைத்து கிளைசார்பிலும் அந்த அந்த பகுதிகளில் 2000 அதிகமான மாணவ மாணவிகலுக்கு கோடைகால பயிற்சி அளிக்கப்படுகிறது இறுதியில் தேர்வு நடத்தி சான்றுகள் வழங்கப்படும் -

செய்தி :-படம் குறிச்சிசுலைமான்.

No comments: