கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 23, 2015

பேட்டை கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரச்சாரம்!
     07.05.2015 வியாழக்கிழமை அன்று கடையநல்லூர் பேட்டை நத்தஹர் தர்ஹா முன்பு வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மாவட்ட 
பேச்சாளர் சகோ.சதாம் உசைன் அவர்கள் "தர்ஹா வழிபாடு ஒரு வழிகேடு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நிதி உதவி!
   பேட்டை கிளை சார்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் மர்கஸ் செலவீனங்களுக்காக ஏப்ரல் 2015 கடைசி ஜூம்மா வசூல் ரூபாய் 5000 மதினா நகர் கிளை நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்!
     கோடைகால பயிற்சி வகுப்பு ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் தலைமையில் கடந்த 08.05.2015 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
இதில் இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கின்ற கோடைகால பயிற்சி வகுப்பு 2015 நிகழ்ச்சியே சிறப்பாக நடத்திட ஆலோசனைகள் பெறப்பட்டு பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பேட்டை கிளை மாணவரணி சார்பாக கடந்த 17.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பேட்டை மர்கஸில் வைத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?? என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாணவரணி செயலாளர் சகோதரர் சித்திக் அவர்கள் தலைமையேற்றார்கள். சகோதரர் சதாம் உசைன் அவர்கள் முன்னுரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து சகோதரர் இஸ்மாயில் அவர்கள் எந்த துறையில் படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் அதற்காக எங்கு படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்கள். இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் அடுத்த வராமும் தொடரும்.

தெருமுனைப் பிரச்சாரம்!
 (21-05-2015) வியாழக்கிழமை அன்று பேட்டை நத்தஹர் தர்கா தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் ஹாலித் அவர்கள் இணைவைப்பு ஒரு பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாக களந்து கொண்டனர், பெண்கள் வீட்டில் அமர்ந்தபடி கேட்டு பயன்பெற்றனர்.
மருத்துவ உதவி !

பேட்டை கிளையை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு கடந்த 14.06.15 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 3,000 அவரது தாயாரிடம் வழங்கப்ப்பட்டது.


பெண்கள் பயான்!
பேட்டை கிளை சார்பாக 19/05/2015 செவ்வாய்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷாமிலா அவர்கள் உரையாற்றினார்கள்.

மாணவரணி சொற்பயிற்சி!
   16-05-2015)  சனிக்கிழமை அன்று மாணவரணி சொற்பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவர் S.அக்ரம்  அவர்கள் உரையாற்றினார்கள்.


No comments: