கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 23, 2015

மதினா நகர் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

கிராமப்புற அழைப்பு பணி :
மதினா நகர் கிளை சார்பாக அன்று (10-05-15) கிராமப்புற தாவா நடைபெற்றது. இதில் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தில் பிறமத 

சகோதரர்களை சந்தித்து இஸ்லாம் குறித்து எடுத்துக் கூறி தாவா (அழைப்பு பணி) செய்யப்பட்டது.
இந்த சந்திப்பில் பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு "முஸ்லிம்கள் தீவரவாதிகள்?" "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம்" போன்ற தலைப்புகளிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தயாத் , தகடு நீக்குதல்!
10-05-15 அன்று மதினா நகர் கிளைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து தாயத், தகடு நீக்கபட்டது.

பேச்சு பயிற்சி!
   20-5-15 அன்று மதினா நகர் கிளை மர்க்கஸில் வைத்து மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி வகுப்பை சகோ.சதாம் உசேன் அவர்கள் கலந்து கொண்டு நடத்தினார்.

பெண்கள் பயான்!
    21-05-15 அன்று கிளை மர்க்கஸில் வைத்து நடைபெற்ற பெண்கள் பயானில் சகோதரி.முபினா அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தெருமுனைப் பிரச்சாரம்!
  21-05-15 அன்று காதர் மைதீன் தெருவில் வைத்து சகோ.தாரிக் அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments: