கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 18, 2015

அனைத்து கிளை ஆலோசனைக் கூட்டம்!

 தாலூகா அலுவலகத்தை நகரின் மையபகுதியில் அமைக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு.

கடையநல்லூர் தாலூகாவிற்கு உட்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து கிளைகளின் கூட்டம் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் 

முகம்மது பைசல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலூகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும்.
இதற்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், அல்லது அட்டக்குளம் மேல்புறம் உள்ள பால்ஊரணில், அல்லது தற்போது தற்காலிக கட்டடமாக செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு தென்புறத்தில் உள்ள இடங்களில் நிரந்தர தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டவேண்டும் ஆனால் மாவட்ட நிர்வாகம் மக்கள் நடமாட்டம் இல்லாத எங்கள் மக்கள் மிருகங்கள் வாழும் சமுக வன காட்டுபகுதியில் 38 ஏக்கர் காட்டு புறம்போக்கு இடத்திற்கு கொண்டு செல்வதை கைவிட வலியுறுத்தி வருகிற 26.06.2015 வெள்ளிக்கிழமை அன்று கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் மாலை 4மணிக்கு தலூகாவிற்கு உட்பட்ட சுமார் 30 வருவாய் கிராம மக்களை ஒன்று திரட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் செய்வதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மேலான்மை குழு உறுப்பினர் அப்துன்நாசர், மாவட்ட பொருளார் அப்பாஸ்,ஜாஹீர் கிளை நிர்வாகிகள் அய்யூப்கான், பாதுஷா, நிரஞ்சன்ஒலி ,அப்துல்லாஹ், மசூது ஆகியோர் கலந்துகொன்டனர்.
புகைப்படம் மற்றும் செய்தி : குறிஞ்சி சுலைமான்


No comments: