கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 8, 2015

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனைக் கூட்டம்!

 04-12-15 அன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை பாருக்கு "ஜும்மாவின் சிறப்பு" என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கிளைகளில் நடைபெற்ற பணிகள் 

பற்றி விரிவாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.
தீர்மானங்கள்!
1) வெள்ள நிவாராண பணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரார்த்தனை செய்வதோடு, அவர்களுக்கான நிதி திரட்டி மண்டலத்திற்கு வழங்குவது.
2) ஷிர்க் ஒழிப்பு மாநாடு மற்றும் டவுண் கிளை மதரசா ஆண்டு விழா வகைக்கு நிதி திரட்டுவது.
ஆகிய தீர்மானங்களுடன் கூட்டம் துவா உடன் நிறைவு பெற்றது.
வெள்ள நிவாராண நிதி உதவி!
வெள்ள நிவாராண வகைக்காக ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள் மற்றும் பத்தா கிளையும் சேர்ந்து வசூல் செய்த ரூபாய் இரண்டு லட்சம்(2,00,000) மண்டல நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

No comments: